உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்ககோரி மனு!

மதுரை கே.கே. நகரை சேர்ந்த பொழிலன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கல்லூரி மாணவிகள், மாதவிடாய் காலத்தில் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்கும் வகையில், அனைத்து கல்லூரிகள், பல்கலைகழங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும். மேலும் பயன்படுத்திய நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்துவதற்கு வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை நியாயமானது என்றும் தென் மாவட்டங்கள் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version