எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய்வழக்கு பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மதுரை வருகை தந்த கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை மதுரை விமான நிலையத்தில் அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் கழக இடைக்கால பொதுச்சாளர் மீதும் மற்றும் கழக நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்த விடியா தி மு க அரசின் காவல்துறையை கண்டித்து காலை 10 மணியில் இருந்து பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவருமான ஆர்பி உதயகுமார் , கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு, கழக அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகிய மூவர் தலைமையில் ஒட்டுமொத்த மதுரை மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவருக்காக மதுரையில் அதிமுக தொண்டர்கள் மாபெரும் அளவில் திரண்டு வந்துள்ளார்கள். தொண்டர்கள் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்காக மதுரை மக்களும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். விடியா திமுக அரசைக் கண்டித்து மாபெரும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Exit mobile version