பொதுமக்களிடம் வரவேற்பை பெற்ற தானியங்கி குடிநீர் மையம்

தமிழகத்தில் முதன் முறையாக தானியங்கி குடிநீர் வழங்கும் மையம் பவானி நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சியில், தமிழக அரசு சார்பில் இந்த தானியங்கி குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏடிஎம் இயந்திரம் போல், அனைத்து நேரங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற முடியும்.

ரூபாய் நாணயத்தை எந்திரத்தில் செலுத்தினால், குடிநீரை பிடித்துக் கொள்ளலாம். 7 ரூபாய்க்கு இருபது லிட்டர் குடிநீரும், ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் குளிர்ந்த நீரும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம், பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பவானி நகராட்சி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும தானியங்கி குடிநீர் மையம் துவக்கப்பட உள்ளது.

Exit mobile version