சென்னை மெரினாவில் மது போதையில் ஆட்டோ கண்ணாடிகள் உடைப்பு

சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 6 ஆட்டோ கண்ணாடிகளை மது போதையில் இருந்த சிலர் உடைத்ததால் நள்ளிரவில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் உள்ள சர்வீஸ் சாலையில் 50 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோவினுள் தூங்கி கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த போதை ஆசாமிகள் 5 பேர் கையில் வைத்திருந்த கட்டையால் ஆட்டோ கண்ணாடிகளை வரிசையாக உடைத்துள்ளனர். உடனே விழித்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சத்தமிட அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் சேர்ந்து ஆட்டோவை உடைத்த நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த மெரினா காவல்துறையினர் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்த நபர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version