இணையம் மூலம் பாலியல் தொழில் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்

கும்பகோணத்தில், பெண்களை வைத்து இணையதளம் மூலம் பாலியல் தொழில் ஈடுபட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்னால் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன், அவரது நண்பர்கள் சிலருடன் இணைந்து, பெண்களை வைத்து இணையதளம் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பள்ளிவாசல் முன்னால் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை காட்டி, ஆட்டோ ஓட்டுனர் அசாருதீன் பலமுறை தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக, அதே பகுதியைச் சேர்ந்த சபினா பானு ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடதக்கது.

Exit mobile version