மின்கட்டணத் தொகையுடன் டெபாசிட் தொகையும் கட்ட அதிகாரிகள் மிரட்டல்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் டெபாசிட்டுடன் மின்கட்டணம் கட்ட அதிகாரிகள் நிர்ப்பந்திப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மயிலம் பகுதியில் மின்கட்டணம் செலுத்தச் செல்பவர்களிடம் கட்டணத்தொகையை தாண்டி கூடுதலாக டெபாசிட் தொகையையும் கட்டச் சொல்வதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கால் கடைகள் செயல்படாமல் இருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு இதே மாதத்தில் கட்டிய கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதாகவும், வாழ்வாதாரம் பாதித்துள்ள தங்களால் எப்படி கட்ட இயலும் என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

டெபாசிட் பணமும் கட்டினால் தான், மின்கட்டண ரசீது வழங்கப்படும் என்றும், இல்லையெனில் மின் விநியோகத்தை நிறுத்திவிடுவதாக மிரட்டுவதாகவும் புகார் கூறியுள்ளனர்.

Exit mobile version