ஆஸ்திரேலிய ஓபன் : ரோஹன் போபன்னா, ஸாக்ஸுவன் யாங் ஜோடி அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபன்னா சீனாவின் ஸாக்ஸுவன் யாங் இணை அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபன்னா சீனாவின் ஸாக்ஸுவன் யாங் ஜோடி, ஜெர்மனியின் அன்னா லீனா கிரோனிஃபெல்ட், பெல்ஜியத்தின் ராபர்ட் ஃபாரா ஜோடியை எதிர்கொண்டது.

விறுவிறுப்புடன் நடந்த இப்போட்டியின் முதல் செட்டை போபன்னா யாங் ஜோடி 6 க்கு 3 என்று கணக்கில் கைப்பற்றியது. 2 வது சுற்றை 6 க்கு 3 என்ற செட் கணக்கில் ஃபாரா, கிரோனிஃபெல்ட் ஜோடி கைப்பற்றியது. இந்நிலையில், 3 வது செட்டை மீண்டும் ஃபாரா, கிரோனிஃபெல்ட் ஜோடி 10 க்கு 6 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து, 2 வது சுற்றுக்கு முன்னேறியது.

Exit mobile version