திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி நிதிமோசடி செய்த தனியார் நிதி நிறுவனம்

திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவன மேலாளரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூரில் கடந்த 3 ஆண்டுகளாக செல்வத்தரசி சிட் பண்ட் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஏலம் எடுத்தவர்களுக்கு பணம் வழங்காமல் காலம் தாழ்த்தியதோடு, இது குறித்து கேட்ட வாடிக்கையாளர்களையும் தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் திருவள்ளூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் நிதிநிறுவன மேலாளர் தமிழ்செல்வியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version