கருப்பு நிறத்துக்கு கொரோனா வைரஸை ஈர்க்கும் தன்மை?

கொரோனா வைரசை ஈர்க்கும் தன்மை கருப்பு நிறத்துக்கு உள்ளதால், வழக்கறிஞர்களின் உடை மாற்றம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அகில இந்திய பார் கவுன்சில் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம், தீர்ப்பாயம் மற்றும் ஆணையங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், கருப்பு அங்கிகள் அணிவதை கட்டாயம் தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை ஆண் வழக்கறிஞர்கள் வெள்ளை நிற சட்டையும், பெண் வழக்கறிஞர்கள் வெள்ளை நிற புடவை அல்லது சல்வார் கமீஸ் அணிந்து விசாரணையில் பங்கேற்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Exit mobile version