பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வழக்கறிஞர்

சென்னை அண்ணாநகரில் வழக்கறிஞர் ஒருவர் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பிரபல ரவுடி பினு, தனது பிறந்தநாளின் போது பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய சம்பவம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போன்று நடந்த மேலும் சில சம்பவங்களிலும், தமிழக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், சென்னை அண்ணாநகரை சேர்ந்த விஜயக்குமார் என்ற வழக்கறிஞர், தனது பிறந்த நாளை, இளைஞர்கள் புடை சூழ, 3 அடி நீளம் கொண்ட பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ, தற்பொழுது வைரலாகி உள்ளது. ரவுடிகள் பட்டாக்கத்தியோடு பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், வழக்கறிஞரும் அதேபோல் செய்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version