கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை சிக்கவைக்க முயற்சி

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை சிக்க வைக்க பிரபல பத்திரிகையாளர் தீட்டிய சதித் திட்டம் வீடியோ ஒன்றின் மூலம் அம்பலமாகியுள்ளது.

கொடநாடு விவகாரத்தில் சயன் மற்றும் மனோஜ் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்க பிரதீப் என்ற நபருடன் அவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி சதித் திட்டம் தீட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை இழுப்பதன் மூலம், விஷயத்தை நீர்த்துப் போகச் செய்ய முடியும் என்று அவர்கள் தீட்டும் சதி வீடியோவில் பதிவாகி உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இந்த விவகாரத்தில் சேர்ப்பதன் மூலம் தங்களை விடுவித்துக் கொள்ள அவர்கள் முயற்சி மேற்கொண்டதும் இந்த வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது.

Exit mobile version