வேலை செய்துகொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி

சேலத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சியில், வழக்கம்போல் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது, இடைவேளையில் கரும்புத்தோட்டத்தின் பக்கம் சென்ற பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். தப்பிக்க நினைத்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்க முயன்றபோது, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஆட்கள் வந்தனர்…

இதனையடுத்து தப்பிஓடிய அந்த வாலிபனை விரட்டிச் சென்ற சிலரை, கத்தியை காட்டி மிரட்டிவிட்டு அந்த வாலிபன் தப்பி ஓடினான்… இதனையடுத்து, அவனை கைது செய்யக் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Exit mobile version