சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி!

டெல்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  டெல்லி மத மாநாட்டில் பங்கேற்ற அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, டெல்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் தனிபிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நோய் தொற்று காரணமாக மனதளவில் பாதிப்பு அடைந்த அவர், மருத்துவமனையின் 6வது மாடியிலிருந்து குதிக்க முயன்றுள்ளார். இதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் தற்கொலைக்கு முயன்ற அந்த நபரை நூலிழையில் காப்பாற்றினர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version