சென்னையில் இளைஞரை தாக்கி செல்போன் பறித்த 2 பேர் கைது

சென்னை அமைந்தகரையில் இளைஞரை தாக்கி செல்போன் பறித்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரபாகர், அமைந்தகரை பகுதியில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில், செல்போன் பேசிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். அப்போது  அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், பிரபாகரை தாக்கி விட்டு 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற காவல்துறையினரிடம், பிரபாகர் புகார் கூறியுள்ளார். அவர்களை இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், கோயம்பேடு பகுதியை சேர்ந்த தீபக்குமார் மற்றும் வினோத்குமார் என்பது தெரியவந்தது. கைது செய்த இருவரிடமும் இருந்து செல்போன் மற்றும் பைக் ஆகியவை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version