கஞ்சாவில் கரை கண்டு, கையில் இரும்பு ராடுடன் சைக்கோ ஆட்டம்…தரும அடி கொடுத்த மக்கள்…

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கஞ்சா போதை தலைக்கேறி கொய்யாபழம் விற்ற மூதாட்டிகளை அடித்து விட்டு, கடைகளை சூறையாடிய இளைஞர் ஒருவரை ஊர் மக்கள் கூடி தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

சட்டை பட்டன் முழுவதையும் திறந்து விட்ட படி, கொய்யாப் பழங்களை வைத்து கோல்ப் விளையாடி கொண்டிருக்கும் இந்த பயித்தியக்கார பாட்ஷா, ஒரு கடைந்தெடுத்த கஞ்சா அடிமை.

”நான் கடவுள்” ஆர்யா போல ”கஞ்சாவில் கரை கண்டு, கையில் இரும்பு ராடுடன் இவர் ஆடிய சைக்கோ ஆட்டத்தை பார்த்து ஈரக்குலை நடுங்கி போய் கிடக்கிறார்கள் இணையவாசிகள்.

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கையில் இரும்பு கம்பியோடு புகுந்த இந்த கருப்பு ஆர்யா, அங்கு கொய்யாப்பழம் விற்று கொண்டிருந்த மூதாட்டிகளை கொடூரமாக தாக்கியுள்ளான்.

வலியில் பொருட்களை கூட எடுக்காமல் அவர்கள் அலறி அடித்து எழுந்து ஒட, வெறியேறிய அந்த வெறுகுப்பூனை, கூடையை அடித்து உடைத்து பழங்களை நாசம் செய்து பஞ்சாமிர்தம் ஆக்கியது.

மதம் பிடித்த மிருகம் ஒன்று அந்த இடத்தையே சூறையாடி கொண்டிருக்க, ஏதோ சினிமா ஷீட்டிங் நடப்பதை போல அமைதியாக சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர் அங்கிருந்த மக்கள்.

இவர்கள் இப்படி இருக்க, போலீஸ் வேலைக்கு தப்பாக எடுக்கப்பட்ட 2 போலீசாரும் அந்த பகுதியில் வாக்கி டாக்கியை வைத்து கொண்டு வாக்கிங் மோடில் இருந்துள்ளனர்.

பொதுமக்களும் போலீசாரும் அவனை பிடிக்க பயந்து கொண்டிருந்த நிலையில், வீரா வீரா என்று கேஜிஎப் பிஜிஎம் ஒலிக்க, ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சிங்கம் போல சிங்கிளாக வந்து கஞ்சா சைக்கோவை பிடரியை பிடித்து தள்ளினார்.

அதுவரை தயங்கி கொண்டிருந்த பொதுமக்களும் கொய்யாப்பழ ரவுடிக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

22 வயதை கூட தாண்டாத இளைஞன் கஞ்சா போதை தலைக்கேறி பொதுவெளியில் ஆடிய சைக்கோ ஆட்டம் திருவண்ணாமலை வாசிகளை பீதியடைய வைத்துள்ளது.

Exit mobile version