சிங்கம்புணரியில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி சரகத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது.

சிங்கம்புணரியை அடுத்த காளாப்பூரில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் அம்பு எறிதல் உள்ளிட்டப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளின் கீழ் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு துறை சார்பில் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டது.

Exit mobile version