46வது நாளில் புஷ்பாங்கி சேவையில் அருள்பாலித்தார் அத்திவரதர்

காஞ்சிபுரம் அத்திவரதர் புஷ்பாங்கி சேவையில் இன்று அருள்பாலித்தார்.

கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவம், 46 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, புஷ்பாங்கி சேவையில் அத்திவரதர் காட்சியளித்து வருகிறார். விடுமுறை நாள் என்பதால், அத்திவரதரை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை நின்று பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டு செல்கின்றனர். 46 நாட்களில் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நாளையுடம் அத்திவரதர் வைபவம் நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து, 17ம் தேதி ஆகம விதிகளின்படி அத்திவரதர் அமிர்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார்.

Exit mobile version