42 நாளான இன்று டிசம்பர் பூ நிற வண்ண பட்டாடையில் அத்திவரதர் தரிசனம்

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 42 நாளான இன்று டிசம்பர் பூ நிற பட்டாடை உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதுவரை சுமார் எழுபத்தி எட்டு லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று வார விடுமுறை என்பதால், காஞ்சிபுரத்தில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர் கூட்டம் உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

Exit mobile version