கேரளாவில் ஒரேநேரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, ராகுல்காந்தி

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்யவுள்ளதையடுத்து கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

திரிச்சூர் மாவட்டத்தின் குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோயில் மிகவும் பிரசித்தமானது. இந்தக் கோயிலில் வழிபாடு மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நேற்றிரவு கேரளா வந்துள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் சென்று இன்று சாமி தரிசனம் செய்கிறார். இதையடுத்து மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் அவர் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் கேரளா வந்துள்ளார். நாளை வரை கேரளாவில் தங்கியிருக்கும் அவர், 15 வரவேற்பு கூட்டங்களில் பங்கேற்கிறார்.

மோடி மற்றும் ராகுல்காந்தி ஒரேநேரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதையடுத்து கேரளா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version