புனித செபஸ்தியார் தேவாலயத்தில் திருத்தேர் பவனிவிழா

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மங்கனூரில் உள்ள பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருத்தேர் பவனி விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதையொட்டி தேவாலயத்தில் கொடியேற்றம் நடத்தப்பட்டது. பங்குதந்தை பால்ராஜ் கொடியை ஏற்றி வைத்தார்

கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டது. உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வேண்டியும் திருப்பலி நடைபெற்றது.

Exit mobile version