குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை

கோவை பொள்ளாச்சியை அடுத்துள்ள அழியாறு குரங்கு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் 2-வது நாளாக குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது…

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் ஆழியாறு அருகே வனப்பகுதியில் குரங்கு அருவியில், நாள்தோறும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஆகிய மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக ஆழியாறு நீர்ப்பிடிப்பு பகுதியான வால்பாறை சோலையாறு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரு தினங்களாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version