மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னிதியில் கும்பாபிஷேக நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதியின், ஐந்துநிலை கோபுரத்தின் மீது, மின்னல் தாக்கி கலசம் சேதம் அடைந்தது. இதை தொடர்ந்து கலசத்தை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. இந்நிலையில், இன்று சிறப்பு பூஜைகளுடன் புனிதநீர் நிரப்பப்பட்ட கடம் புறப்பாடாகி, ஆடி வீதிகளை சுற்றி வந்தடைத்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றன. கோபுரங்களுக்கு ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version