ஆட்சியர் வளாகத்தில் வாலிபரை வெட்டி கொன்ற மர்ம கும்பல்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனங்காடி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதி மன்றத்தில் ஆஜராகி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஆறு பேர் கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக தாக்கியது, இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் மீது ஏற்கனவே ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

Exit mobile version