மதுரை தல்லாகுளத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசித் திருவிழா

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

முன்னதாக பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சமேதராக கொடி மரம் முன்பு உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் தீபராதனைகள் காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள். பிரம்மோற்சவ விழா தொடங்கியதையடுத்த தினமும் காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

Exit mobile version