குஜராத் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; 18 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

குஜராத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் நேரிட்ட தீ விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத்தின் பரூச் – ஜம்புசார் (bharuch – jambusar) பகுதியில் உள்ள பட்டேல் வெல்ஃபேர் மருத்துவமனையில் 50க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வந்தனர்.

4 மாடி கட்டிடங்கள் கொண்ட மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீப்பற்றி கொண்டது.

மளமளவென பரவிய தீயால் கரும்புகை சூழ்ந்ததால் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு 50க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 2 செவிலியர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version