தெலங்கானாவில் மண் அள்ளும் பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு விபத்து : 10 பேர் பலி

தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் திலேர் கிராமத்தில் பொக்லைன் மூலம் மண் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மண்சரிவில் உயிரிழந்த அனைவரும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்று தகவல் தெரிவித்துள்ளன.

Exit mobile version