எந்த நிலையிலும் திமுகவை தலை தூக்க விடமாட்டோம்:அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்து விட்டதால், ஸ்டாலின் பேச்சில் ஆதங்கம் வெளிப்படுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் கொத்தடிமைகளாக அவதிப்பட்டு வந்த 49 தமிழர்கள் மீட்கப்பட்டு தாயகம் கொண்டு வரப்பட்டனர். விமான மூலம் சென்னை வந்த அவர்களை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈழ இறுதி போரில் ஒன்றரை லட்சம் தொப்புள்கொடி உறவுகள் இறந்ததற்கு திமுகவே காரணம் என்றும் எந்த நிலையிலும் திமுகவை தலை தூக்க விடமாட்டோம் எனவும் கூறினார். அதிமுக – பாஜக – பாமக மெகா கூட்டணி திமுகவுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது எனக்கூறிய அவர், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்து விட்டதால், ஸ்டாலின் பேச்சில் ஆதங்கம் வெளிப்படுகிறது என்றார்.

Exit mobile version