ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போதே மேடையில் தூங்கிய வேட்பாளர்

திருவள்ளூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தூங்கி வழிந்ததால் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். திருவள்ளூர் தனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர் ஜெயக்குமாரை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது. வேட்பாளர் ஜெயக்குமார் மேடையில் தூங்கி வழிந்தார்.

மேடை அருகே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைக்கும் கூட்டத்திலேயே வேட்பாளர் இப்படி தூங்கினால், பிரசாரத்திற்கு தொகுதி பக்கம் செல்வாரா? ஜெயிப்பது சிரமம்தான் என நிர்வாகிகளும், தொண்டர்களும் பேசிக் கொண்டனர்.

Exit mobile version