கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட மாணவரை சரமாரியாக தாக்கிய திமுக பிரமுகர்

சென்னையில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட மாணவரை, திமுக பிரமுகர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தனியார் கல்லூரி மாணவரான மூர்த்தி என்பவர், தன்னுடைய சக மாணவனும், திமுக 114வது வார்டு உறுப்பினர் கண்ணன் என்பவரின் மகனுமான கவித்ரனுக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் பணம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. 2 வருடங்களாக பணத்தை திருப்பிக் கொடுக்காத கவித்ரன், பணத்தை திருப்பிக்கேட்டதற்காக தனது தந்தையுடன் சேர்ந்து மூர்த்தியை தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த மூர்த்தி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர்,மாணவன் கவித்ரன் அவரது தந்தை கண்ணன் ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி இருவரையும் புழல் சிறையிலடைத்தனர். திமுகவினரின் அராஜகம் தொடர்கதையாகிவருகிறது என இந்த சம்பவம் குறித்து பொது மக்கள் கவலை தெரிவித்தனர்.

Exit mobile version