ஆசிய தடகள போட்டி: தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து

தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றுள்ளார்.

கத்தார் நாட்டிலுள்ள தோஹாவில் 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று அசத்தியுள்ளார். 30 வயது நிரம்பிய இவர் 2 நிமிடம் 2 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்து நாட்டிற்கு தங்கப் பதக்கத்தை பெற்று தந்துள்ளார். ஆசிய தடகள போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றுள்ளது.

Exit mobile version