கார்ப்பரேட் நிறுவனமாக திமுக மாறிவிட்டது – அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அரசியலில் அதிமுகவை மிஞ்சும் அளவிற்கு கட்சிகள் கிடையாது என்றும், இனி வரும் கட்சிகளாலும் அது முடியாது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார்ப்பரேட் நிறுவனமாக மாறிய திமுகவில், பிரசாந்த் கிஷோரைத் தான் தொண்டர்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் விமர்சித்தார்.

மேலும், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியது போல், அரசியல் ரீதியாக கருத்து சொல்வதற்கான பக்குவமும், தைரியமும் திமுகவிற்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

Exit mobile version