துப்புரவு பணியாளராக பணியாற்றிய பெண், ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துப்புரவு பணியாளராக பணியாற்றிய பெண்,  ஊராட்சி மன்றத் தலைவராக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் கான்சாபுரம் பஞ்சாயத்தில் அரசு துப்புரவு பணியாளராக சரஸ்வதி பணியாற்றி வந்துள்ளார். இவர் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு , நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கான்சாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காக போட்டியிட்டுள்ளார். இதையடுத்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற சரஸ்வதி, முறைப்படி ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Exit mobile version