அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று கொரோனா பரிசோதனை!!

காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ள அவர், வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். காய்ச்சல் அறிகுறி ஏற்பட்ட பிறகு, கெஜ்ரிவால் வெளிநபர்கள் யாரையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version