மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண் குமார் சின்ஹா நியமனம்

மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண் குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் மசூத் உசைனின் பதவிக்காலம், கடந்த 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மத்திய நீர் வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண் குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

அருண் குமார் சின்ஹா முன்னதாக கங்கை தூய்மைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு துறையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவர் பதவி இதுவரை நிரப்படவில்லை. விரைவில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்ஹாவே நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Exit mobile version