அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி காலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்றிரவு அருண் ஜெட்லியின் உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ள அருண் ஜெட்லியை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் மத்திய அமைச்சர்கள் சென்று பார்த்தனர். இதையடுத்து இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, அருண் ஜெட்லியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

Exit mobile version