மீண்டும் நிதியமைச்சர் ஆகிறார் அருண் ஜெட்லி

சிகிச்சை பெற வெளிநாடு சென்று திரும்பிய அருண் ஜெட்லி, இன்று நிதியமைச்சர் பதவியை மீண்டும் ஏற்கவுள்ளார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அண்மையில் மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். இதையடுத்து அவரது நிதித்துறை பொறுப்புகள் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனால் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை பியூஷ்கோயல் தாக்கல் செய்தார். இதனிடையே அருண் ஜெட்லியின் உடல்நிலை மெல்ல சீரானதையொட்டி, இன்று முதல் நிதித்துறை அமைச்சர் பதவியை மீண்டும் ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பாதுகாப்பு விவரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்திலும் அருண் ஜெட்லி பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

Exit mobile version