அருண் ஜேட்லிக்கு எக்மோ கருவி பொருத்தி தீவிர சிகிச்சை

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதால், அவருக்கு எக்மோ கருவி பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உடல்நிலை குறைவு காரணமாக அருண் ஜெட்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜேட்லியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். இந்தநிலையில், அருண் ஜேட்லி உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதால், எக்மோ கருவியை பொருத்தி, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Exit mobile version