அரியலூரில் அருள்மிகு திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

அரியலூரில் பிரசித்திப்பெற்ற அருள்மிகு திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அரியலூர் மாவட்ட செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட நக்கம்பாடி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி கொடியேற்றதுடன் திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் நடைபெற்ற தீமிதி நிகழ்வில், பெரும்மாண்டி, செந்துறை, வெள்ளூர் உள்ளிட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்றனர்.

Exit mobile version