தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான கலைத்திறன் போட்டிகள்

பெருந்துறை தனியார் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற கலைத்திறன் போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமான நாடகங்கள் மற்றும் வினாடி வினா, செய்கை மூலம் காட்சிகளை புரிந்து கொள்ளுதல், புதையல் தேடுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Exit mobile version