கேரளாவில் கொள்ளையடித்த கும்பல் சேலத்தில் கைது

கேரளாவின் பத்தினம்திட்டா பகுதியில் உள்ள ஒரு நகை கடையில் நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்னை நோக்கி காரில் வந்த கும்பல் சேலம் அருகே பிடிபட்டது. உத்தமசோழபுரம் அருகே காரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், மூன்றரை கிலோ தங்கம், 13 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கூடுதல் தகவல்களை தருகிறார் செய்தியாளர் மதியழகன்…

Exit mobile version