போதை மாத்திரை, ஸ்டாம்புகளை விற்பனை செய்தவர் கைது

சென்னை முகப்பேரில் போதை மாத்திரை, போதை ஸ்டாம்புகளை விற்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் போதை பொருட்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த சரத் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போத மாத்திரை மற்றும் ஸ்டாம்ப் களை விற்பனை செய்வது தெரிய வந்தது. சரத்தைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 3.75 லட்ச ரூபாய் போதைப் பொருளையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version