பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் : அசுதோஷ் சுக்லா

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அசுதோஷ்சுக்லா, தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்தும் கண்டறியப்பட்டு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பொது மக்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்படும் என்றும் மக்கள்அச்சமின்றி வாக்களிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version