அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பாதுக்காப்பு பணியில் 3500 போலீசார் நியமனம்

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 3500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வரும் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், காவல் துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பணியில் ஆயுதப்படை போலீசார் 1700 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் 560 பேரும், மேலும் மத்திய ஆயுதப்படை போலீசார் 240 பேரும், ஊர்க்காவல் படையினர் 500 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் இந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 23 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version