டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ராணுவ வீரர் தற்கொலை முயற்சி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்த ராணுவ வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், மேல உரப்பனூர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சக்தி என்பவருக்கும், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தேனிஷா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த வாரம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தேனிஷா,  சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் பங்கேற்ற   சக்தி,  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி அங்குள்ள கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது டிரான்ஸ்பார்மர் வெடித்ததில், பலத்த காயமடைந்த ராணுவ வீரர் சக்தி, உடனடியாக   ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version