தேர்தல் பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

மக்களவை தேர்தலை ஒட்டி நெல்லை மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன் தலைமையில் துணை ராணுவத்தினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

நெல்லை மாநகரில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக, மாநகர காவல் துறை சார்பில் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துணை ராணுவ படையினருக்கு பணி ஒதுக்கீடு குறித்து காவல் ஆணையர் பாஸ்கரன் அறிவுரைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை மாநகரில் பதற்றமான 140 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 24 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version