ராணுவத் தளபதி பிபின் ராவத்தின் பதவிக்காலம் நிறைவு

நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, அவருக்கு வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

ராணுவத் தளபதியாக பதவி வகித்து வந்த பிபின் ராவத் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அதனை தொடர்ந்து பிபின் ராவத்தை நாட்டின் முப்படைத் தளபதியாக மத்திய அரசு நியமித்தது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசியப் போர் நினைவிடத்தில், பிபின் ராவத் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக பிபின் ராவத்தை வழியனுப்பும் விதமாக ராணுவ வீரர்கள் அணி வகுப்பின் மூலம் மரியாதை செலுத்தினர்.

பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சவாலான சூழ்நிலைகளில் உறுதியுடன் பணியாற்றிய ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்தார். நாளை காலை பிபின் ராவத் முப்படைத் தளபதியாக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version