அர்ஜூனா விருது பெற்ற தமிழக வீரர் பாஸ்கரன் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து

அர்ஜூனா விருது பெற்ற தமிழக வீரர் பாஸ்கரன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டர் பாஸ்கரன், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, கபடி வீரர் அஜய் தாக்கூர், உள்ளிட்ட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பாஸ்கரன் வாழ்த்து பெற்றார். இவர் உலக அளவிலான ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

Exit mobile version