அர்ஜூன் மீது பெங்களூரு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு – நடிகை ஸ்ருதி மீண்டும் பாலியல் புகார்

பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.Metoo விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் அர்ஜூன் விவகாரமும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. நிபுணன் படத்தில் பணியாற்றியபோது அர்ஜூன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, படத்தின் நாயகி ஸ்ருதி ஹரிஹரன் மீ டூ வில் பதிவிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டை நடிகர் அர்ஜூன் மறுத்தார். இந்த நிலையில், விஸ்மயா என்ற கன்னட படத்தில் நடித்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பெங்களூரு போலீசார் அர்ஜூன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

 

Exit mobile version