அரவக்குறிச்சியில் 32 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும்

அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் மேஜைகள் குறைக்கப்பட்டு வாக்கு எண்ணும் சுற்றுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை மையத்தின் அறை சிறிய அளவாக இருப்பதாலும், 63 வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பார்கள் என்பதாலும் இட நெருக்கடி ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகளுக்கு பதிலாக 8 மேஜைகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேஜைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால், 17 சுற்றுகளுக்கு பதிலாக 32 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version