ஆரணி அருகே கோவில் கதவை பூட்டியதை திறக்க கோரி பொது மக்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இருதரப்பினர் கோஷ்டி மோதலால், கோவில் கதவை பூட்டியதை திறக்க கோரி பொது மக்கள் கோவிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணி அருகே காட்டுகாநல்லூர் கிராமத்தில் உள்ள தர்மராஜா திருக்கோயில் பாழடைந்து காணப்பட்டது. இந்த திருக்கோவிலை சீர் செய்ய அப்பகுதியில் உள்ள பொது மக்கள் ஒன்று திரண்டு,பொது மக்களிடம் வசூல் செய்து கோவில் திருப்பணிகள் தொடங்கி, அப்பணிகள் நிறைவடையும் நிலையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. 

Exit mobile version